இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Sunday, June 6, 2021

 


'இரகசியமாய்க் கொல்லும் இருள்" எனும் சிறுகதைத் தொகுப்பு நூல் ஏப்ரல் 2015இல் சாத்வீக சுருதி வெளியீடாக பிரசுரமானது. 95 பக்கங்களில் நோக்கம் கருதித் தெரிவுசெய்யப்பட்ட 9 சிறுகதைகள் உள்ளடங்கியுள்ளன. 'அநீதியான மேலாண்மைக்குள் உயிரழியும் பிஞ்சு மனங்களின் குரலாக, இத்தொகுப்பின் சிறுகதைகள் யாவும் சமூகத்தின் ஆத்மாவை உலுக்கி நிற்கின்றன" என்று இக்கதைகள் பற்றி வாழ்த்துரையில் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் குறிப்பிடுகின்றார். திருமதி கோகிலா மகேந்திரன் அணிந்துரையில், தொகுப்பில் அடங்கிய கதைகளின் உளவியல் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றார். வடக்குமாகாண பண்பாட்டு அமைச்சின் 2015ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் பரிசு பெற்றது. 

No comments:

Post a Comment