இராஜேஸ்கண்ணனின் சிறுகதைகள், திறனாய்வுகள், சமூகவியல் நோக்கிலான கட்டுரைகள், கவிதைகள் முதலியவற்றுடன் வெளிவந்துள்ள நூல்களையும் இங்கு படிக்கலாம்.

Sunday, June 6, 2021



'கிராமியம்-கல்வி-மேம்பாடு: சமூகவியல் பார்வைகள்" எனும் நூல் சமூகவியல் தொடர்பான கட்டுரைகளின் தொகுப்பாகும். சாத்வீக சுருதி வெளியீடாக டிசம்பர் 2013இல் பிரசுரமானது. உள்ளடங்கியுள்ள பத்துக் கட்டுரைகளில் கல்வியின் சமூகவியல் நோக்கிலான கட்டுரைகளும், கிராமிய சமூகவியல் தொடர்பான கட்டுரைகளும், அபிவிருத்தி மற்றும் உலகமயமாக்கம், இளையோர் சமூகவியல் சார்ந்த கட்டுரைகளும் உள்ளன. அல்-புனைவாக்க வகையைச் சேர்ந்த நூலான இது ஓரளவுக்கு சமூகவியல் புலமைநெறிப்பட்ட கட்டுரைகளைக் கொண்டது. 

No comments:

Post a Comment